சோனியா, ராகுலை ஆடைகளை அவிழ்த்து இத்தாலிக்கு விரட்ட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ. வெறிப் பேச்சு
ஜெய்பூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை ஆடைகளை அவிழ்த்துவிட்டு இத்தாலிக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் ராஜஸ்தான் மாநிலம் டோங் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு அவர்களை இத்தாலிக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றார்.
இதையடுத்து ரேகரின் பேச்சு குறித்து காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
பின்னர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரேகர் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அவர் மேலும் கூறுகையில், நான் யார் பெயரையும் கூறவில்லை. என் பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications