2004, 2009 தேர்தல் மாதிரி கருத்து கணிப்புகள் மீண்டும் பொய்யாகும்: சோனியா நம்பிக்கை
டெல்லி: கடந்த 2004, 2009 ஆம் ஆண்டு தேர்தல்களைப் போல கருத்து கணிப்புகள் மீண்டும் பொய்யாகும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, வாரணாசியில் மோடிக்கு எதிராக நிச்சயமாக காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படுவார். யார் வேட்பாளர் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

பொதுவாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. 2004, 2009ஆம் ஆண்டு தேர்தல்களின் போதும் இதேபோல் கருத்து கணிப்புகள் வெளியாகி பொய்யாகின. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பிரதமரை, தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் தேர்வு செய்வார்கள் என்றார்.
இதேபோல் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அரசு மீதான பாரதிய ஜனதா கட்சியின் ஊழல் புகார்கள் பொய்யென நாங்கள் நிரூபிப்போம் என்றார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பல கட்சிகள் ஏற்கவில்லை. தமிழகம், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவில்லைதான்.ஆனால். மற்ற மாநிலங்களில் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம்.
பாரதிய ஜனதாவும் கூட சில மாநிலங்களில் கூட்டணி அமைக்கவில்லையே.. பாஜகவின் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம்போல இம்முறையும் தோல்விதான் ஏற்படும். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கொள்கைகள் நாட்டுக்கு கேடு விளைவிப்பவை என்றார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications