2004, 2009 தேர்தல் மாதிரி கருத்து கணிப்புகள் மீண்டும் பொய்யாகும்: சோனியா நம்பிக்கை
டெல்லி: கடந்த 2004, 2009 ஆம் ஆண்டு தேர்தல்களைப் போல கருத்து கணிப்புகள் மீண்டும் பொய்யாகும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, வாரணாசியில் மோடிக்கு எதிராக நிச்சயமாக காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படுவார். யார் வேட்பாளர் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

பொதுவாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. 2004, 2009ஆம் ஆண்டு தேர்தல்களின் போதும் இதேபோல் கருத்து கணிப்புகள் வெளியாகி பொய்யாகின. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பிரதமரை, தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் தேர்வு செய்வார்கள் என்றார்.
இதேபோல் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அரசு மீதான பாரதிய ஜனதா கட்சியின் ஊழல் புகார்கள் பொய்யென நாங்கள் நிரூபிப்போம் என்றார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பல கட்சிகள் ஏற்கவில்லை. தமிழகம், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவில்லைதான்.ஆனால். மற்ற மாநிலங்களில் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம்.
பாரதிய ஜனதாவும் கூட சில மாநிலங்களில் கூட்டணி அமைக்கவில்லையே.. பாஜகவின் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம்போல இம்முறையும் தோல்விதான் ஏற்படும். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கொள்கைகள் நாட்டுக்கு கேடு விளைவிப்பவை என்றார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications