பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.5000 அபராதம்! நாடு முழுவதும் விரைவில் அமல்
டெல்லி: பொது இடங்களில் சிறுநீர் கழித்தால், மலம் கழித்தால் ரூ. 5000 அபராதம் விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதற்காக தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் இந்தத் திட்டம் இன்னும் நகரங்களில் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் உள்ளது.

இதையடுத்து இந்த திட்டத்தை உறுதியாக அமல்படுத்தும் எண்ணத்தில், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்க்ளுக்கு ரூ. 200 முதல் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்க வேண்டும். முதலில் இந்த திட்டத்தை வரும் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் நகரின் ஒரு வார்டில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆண்டு இறுதியில் 10-15 நகரங்களில் அனைத்து வார்டுகளிலும் அமல்படுத்த வேண்டும், பின்னர் அனைத்து நகரங்களிலும், அனைத்து வார்டுகளிலும் 2018, ஏப்ரல் 30ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகரின் அனைத்து இடங்களிலும் போதிய கழிப்பறை வசதிகள், குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். வீட்டுக்கே சென்று குப்பைகளை சேகரித்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், முறையான வசதிகளை செய்த பின்னரே இந்த அபராதத்தை விதிக்க வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications