டெல்லியில் இனி பெட்ரோல், டீசல் போட 'மாசுகட்டுப்பாடு' சர்டிபிகேட் அவசியம்!!
டெல்லி: இரு சக்கர வானனங்களுக்கு பெட்ரோல், டீசல் வாங்க வேண்டுமெனில் 'மாசுகட்டுப்பாடு' சர்டிபிகேட் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்துகிறது டெல்லி அரசு.
டெல்லி அரசின் தலைமை செயலாளர் ஸ்ரீவஸ்தவா தலைமையில் மாசு கட்டுப்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும் கட்டாயம் மாசுகட்டுப்பாடு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இத்தகைய சான்றிதழ்களை வழங்குவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதன் பின்னர் ஓரிரு மாதங்களில் மாசுகட்டுப்பாடு சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என்ற நிலைமையை நடைமுறைப்படுத்துவது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.