ஒப்பந்த அடிப்படையில் இந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சடிக்கப்படுகிறதா?.. மத்திய அரசு மறுப்பு
இந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சடிக்கப்படுகிறது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: இந்திய ரூபாய் நோட்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சீனாவில் அச்சடிக்கப்படுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில், சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற செய்தித்தாள் வெளியிட்ட செய்தி இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த செய்தி என்னவென்றால், இந்தியா, நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், மலேசியா, பிரேஸில் உள்ளிட்ட நாட்டு அரசுகளுக்கு ரூபாய் நோட்டுகளை சீனா அச்சடித்து தருகிறது என்று செய்தி வெளியிட்டது.

சீனாவில் பல நாட்டு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை சீன வங்கி நோட்டு அச்சடிக்கும் மிண்ட்டிங் கார்ப்பரேஷன் உறுதி செய்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு சீனா நேபாளத்திடமிருந்து ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சடிக்கப்படுவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சசிதரூர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து சசிதரூருர் குறிப்பிடுகையில், இந்த செய்தி உண்மையானால் இது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தாகும். இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
சீன நிறுவனம் இந்தியாவுக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து தருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து நிதி அமைச்சகம் தெரிவிக்கையில், எந்த சீன நிறுவனமாவது இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் ஒப்பந்தத்தை பெற்றிருப்பதாகக் கூறினால் அது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் கூறுகையில், "இந்திய ரூபாய் நோட்டுகளை இந்திய அரசாங்கமும் ரிசர்வ் வங்கி அச்சகமும்தான் அச்சடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications