'ஓவர் டேக்' செய்ததால் கடுப்பு.. லாரியை நிறுத்தி எருமை மாடுகளை 'பத்தி' விட்ட எம்.எல்.ஏ
ஜெய்ப்பூர்: தனது காரை எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஓவர் டேக் செய்ததால் கடுப்பாகிப் போன சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. அந்த லாரியை நிறுத்தி அதில் இருந்த எருமை மாடுகளை கீழே இறக்கி வெளியேற்றி தனது டென்ஷனைக் காட்டிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த கோபக்கார எம்.எல்.ஏவின் பெயர் ராஜ்குமார் யாதவ். ராஜஸ்தான் மாநிலம் சாதர் என்ற தொகுதியைச் சேர்ந்தவர். சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்தவர்.

இவர் சம்பவத்தன்று கோட்டா என்ற கிராமத்தின் வழியாக தனது காரில் போய்க் கொண்டிருந்தார். அப்போது ஒரு எருமை மாடுகளை ஏற்றிய லாரி அவரது காரை ஓவர் டேக் செய்து வேகமாக சென்றது. இதைப் பார்த்த எம்.எல்.ஏ கோமடைந்தார். அந்த லாரியை துரத்திச் சென்று மடக்கி நிறுத்தினார்.
பின்னர் கோபத்துடன் சத்தம் போட்டபடி லாரியிலிருந்த எருமை மாடுகளை கீழே பத்தி விட்டார். விடுவிக்கப்பட்ட எருமைகள் வேகமாக ஓடத் தொடங்கின. இதைப் பார்த்த கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பலர் அந்த எருமை மாடுகளை தங்களது வீடுகளுக்குக் கூட்டிச் சென்றனர். தகவல் அறிந்ததும் மாடுகளின் உரிமையாளர்கள் ஓடி வந்தனர். போலீஸாரிடம் முறையிட்டனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அந்த எருமைகளை கொல்வதற்காக கூட்டிச் செல்வதாக அவர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் விரட்டி விடப்பட்ட எருமை மாடுகளை திரும்பப் பெறும் முயற்சியில் போலீஸார் இறங்கினர். வீடு வீடாகச் சென்று தயவு செய்து மாட்டைப் பிடித்து வந்திருந்தால் கொடுத்து விடுங்கள் என்று கிராமவாசிகளிடம் கெஞ்சிக் கேட்டனர். இதன் விளைவாக விரட்டி விடப்பட்ட 30 எருமைகளும் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் எம்.எல்.ஏவைச் சந்தித்த மாடுகளின் உரிமையாளர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாகினார்கள். தங்களது மாடுகள் அருகில் உள்ள பால் பண்ணைக்குத்தான் போய்க் கொண்டிருந்ததாக அவர்கள் கூறினார்கள். பின்னர் சமரசம் ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications