விசா கிடைப்பதில் தாமதம்.. ரோட்டோரம் படுத்து தூங்கிய இந்திய மாற்றுத்திறனாளி தடகள வீரர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தாய்வான் நாட்டு விசா கிடைப்பதில் காலதாமதமானதால், இந்திய மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர்கள் சாலையோரம் படுத்து தூங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டிகள், தாய்வான் நாட்டில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 40 பேர் டெல்லியில் இருந்து தாய்வான் புறப்பட்டனர். ஆனால் கடைசி நேரத்தில், தாய்வான் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டதாக அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது.
ஆனால், தங்குவதற்கு அவர்களுக்கு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்யப்படாததால், குருத்வாரா வழிபாட்டு தலம் அருகே சாலையோரம் படுத்து தூங்கியுள்ளனர். இதன்பிறகு விசா கிடைத்த பிறகு தாய்வான் சென்றுள்ளனர். தகவல் அறிந்த விளையாட்டு அமைச்சகம், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications