நோன்பு இருக்கும் முஸ்லீம் கைதிகளுக்கு பால், பழம், சிறப்பு கவனிப்பு: பஞ்சாப் சிறைத்துறை அமைச்சர்
சன்டிகர்: பஞ்சாப் மாநில சிறைகளில் நோன்பு இருக்கும் கைதிகளுக்கு பால், பழம் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குமாறு அம்மாநில சிறைத்துறை அமைச்சர் சோஹன் சிங் தண்டால் உத்தரவிட்டுள்ளார்.
முஸ்லீம்கள் புனித ரமலான் மாதம் துவங்கியதையடுத்து நோன்பு இருந்து வருகின்றனர். இந்தியாவில் திங்கட்கிழமை முதல் முஸ்லீம்கள் நோன்பு இருக்கின்றனர். பஞ்சாப் மாநில சிறைகளில் உள்ள முஸ்லீம் கைதிகளும் நோன்பு இருக்கிறார்கள்.
இந்நிலையில் பஞ்சாப் சிறைகளில் நோன்பு இருக்கும் முஸ்லீம் கைதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு அம்மாநில சிறைத்துறை அமைச்சர் சோஹன் சிங் தண்டால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சோஹன் அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் போன் செய்து நோன்பு இருக்கும் முஸ்லீம் கைதிகளுக்கு பால், பழம் உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறை விதிமுறைகளின்படி உணவுகள் சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துமாறு அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரதத்தை பரிசோதிக்குமாறு சோஹன் சிறையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications