29 வருஷமா கொடுமைப்படுத்தினேனா? ஸ்ரீலேகாவுக்கு நட்டு கழன்றுவிட்டது: ஐபிஎஸ் அதிகாரி தச்சங்கரி
திருவனந்தபுரம்: தன் மீது புகார் தெரிவித்துள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில போக்குவரத்து கமிஷனரும், ஐபிஎஸ் அதிகாரியுமான டோமின் தச்சங்கரி தெரிவித்துள்ளார்.
கேரளாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆர். ஸ்ரீலேகா. அவர் கடந்த சனிக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கேரள மாநில போக்குவரத்து கமிஷனரும், ஐபிஎஸ் அதிகாரியுமான டோமின் தச்சங்கரி மீது பல புகார்கள் தெரிவித்துள்ளார்.

ஐபிஎஸ் பயிற்சி காலம் துவங்கி கடந்த 29 ஆண்டுகளாக தச்சங்கரி தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், தனக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர காரணமாக இருந்ததாகவும் ஸ்ரீலேகா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி சக அதிகாரி மீது புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலேகா தற்போது மாநில குற்ற ஆவண காப்பக தலைவராக உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தச்சங்கரி செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,
ஸ்ரீலேகா தெரிவித்துள்ள புகார்களில் உண்மை இல்லை. இது குறித்து நான் என் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பேன். அவர் மீது அவதூறு வழக்கு தொடர அரசிடம் அனுமதி கோரியுள்ளேன். ஸ்ரீலேகாவின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications