இலங்கை அதிபர் சிறிசேனா நாளை இந்தியா வருகை! முதலாவது வெளிநாட்டு பயணம்!!
டெல்லி: இலங்கை அதிபர் சிறிசேனா 4 நாட்கள் பயணமாக நாளை இந்தியாவுக்கு வருகிறார். அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன 4 நாட்கள் பயணமாக நாளை டெல்லிக்கு வருகிறார். அவர் அதிபரான பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்களை 16-ந் தேதியன்று சிறிசேன சந்தித்து பேசுகிறார். அவருக்கு ஜனாதிபதி விருந்து அளிக்கிறார்.
பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து சிறிசேனா பேச்சுவார்த்தை நடத்துகிறார். இலங்கையில் தமிழர்களுடனான அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள், பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதிக்கின்றனர்.
பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் 17-ந்தேதி சிறிசேன செல்கிறார். 18-ந்தேதி அவர் இலங்கைக்கு திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications