எனது புத்தகத்தில் ஸ்ரீதேவியின் அத்தியாயம் ஒரு காதல் கடிதம்... உருகும் ராம்கோபால் வர்மா
மும்பை: கன்ஸ் அண்ட் தைஸ் என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தில் நடிகை ஸ்ரீதேவியின் அத்தியாயம், ஒரு காதல் கடிதம் எனத் தெரிவித்துள்ளார் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா.
சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா. இவர் தனது சுயசரிதையை ‘கன்ஸ் அண்ட் தைஸ்' என்ற பெயரில் எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தில் நடிகை ஸ்ரீதேவியை அழகு தெய்வம் என ராம்கோபால் வர்ணித்துள்ளார்.
போனிகபூர்...
அதோடு ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூரைத் தான் மன்னிக்கவே மாட்டேன் என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
டீ தயாரிக்கும் ஸ்ரீதேவி...
அதற்கு அவர் கூறும் காரணம், "போனி கபூர் வீட்டு சமையல் அறையில் ஸ்ரீதேவி டீ தயாரித்துக்கொண்டிருப்பதை என்னால் ஏற்கவே முடியாது. நான் அவரை (போனி கபூரை) மன்னிக்கவே மாட்டேன்.
தேவதை...
ஏனென்றால், விண்ணுலகில் இருந்து ஒரு தேவதையை தனது வீட்டு சமையல் அறைக்கு கொண்டு வந்து விட்டாரே, அதற்காக" என்கிறார் அவர்.
காதல் கடிதம்...
கூடவே, "ஸ்ரீதேவியைப் பற்றிய இந்த அத்தியாயம், ஒரு காதல் கடிதம். கொஞ்சம் அதிகமாக சொல்வதாக நினைக்கலாம். ஆனால் இதுதான் என் உணர்வு.
ஈர்ப்பு...
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவர் மீது ஈர்ப்பு இருக்கும். அது நிஜ மனிதராக இருக்கலாம். பிரபலமாகவும் இருக்கலாம். அந்த உயர்வான எண்ணத்தை நீங்கள் அனுபவிக்கலாம். இது கிட்டத்தட்ட ஒரு போதைபோன்றதுதான்..." என அவர் கூறுகிறார்.
சர்ச்சை...
ஏற்கனவே, தனது புதிய படத்திற்கு ஸ்ரீதேவி எனப் பெயரிட்டு ராம்கோபால் வர்மா சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
ஊர்மிளா...
மேலும், இந்தப் புத்தகத்தில் நடிகை ஊர்மிளாவை ‘எனது உத்வேகம்' என புகழ்ந்துள்ளார் ராம் கோபால் வர்மா.