உயிருடன் இருந்த மாதிரியே காட்சி அளித்த ஸ்ரீதேவியின் முகம்: ரசிகர்கள் நெகிழ்ச்சி
ஸ்ரீதேவி இறந்த பிறகும் அவரது முகத்துக்கு மேக்கப் போடப்பட்டு உதட்டுக்கு லிப்ஸ்டிக் போடப்பட்டிருந்ததை கண்டு ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.
Recommended Video

மும்பை: ஸ்ரீதேவி இறந்த பிறகும் அவரது முகத்துக்கு மேக்கப் போடப்பட்டிருந்ததை பார்த்த போது அவர் உயிருடன் இருந்தது போலவே இருந்தது.
துபாயில் நாத்தனாரின் மகன் திருமணத்துக்கு சென்ற கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி கடந்த வாரம் சென்றிருந்தார். அங்குள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பாத்ரூமில் மயங்கி விழுந்த அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது ரத்தத்தில் மதுபானம் கலந்திருந்தது தெரியவந்தது.

மாரடைப்பு இல்லை
ஸ்ரீதேவி குடிபோதையில் பாத்டப்பில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் குற்றவியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு எம்பாமிங் செய்யப்பட்டு நேற்று மும்பை கொண்டு வரப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலி
ஸ்ரீதேவியின் உடல் அந்தேரியில் உள்ள ஸ்போர்ட் கிளப் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவருக்கு சிகப்பு நிறத்தில் சேலை அணிவிக்கப்பட்டிருந்தது.

லிப்ஸ்டிக்
ஸ்ரீதேவியின் முகத்தில் மேக்கப் போடப்பட்டு உதட்டுக்கு லிப்ஸ்டிக்கும் போடப்பட்டிருந்தது. இது பார்ப்பதற்கு ஸ்ரீதேவி உயிரோடு சும்மா படுத்திருப்பதை போல் காட்சியளித்தது. அத்தனை பொலிவுடன் இருந்ததை கண்ட ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர்.

மேக்கப்
ஸ்ரீதேவி அழகு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார் என்றும் அதைத்தான் அவர் விரும்புவார் என்று கூறப்படுகிறது. வயோதிக தோற்றம் தெரியக் கூடாது என்பதற்காகவே அவர் 6 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதும் அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய ஸ்ரீதேவிக்கு இறந்த போதும் அவர் உயிரோடு இருந்தது போலவே மேக்கப் போடப்பட்டிருந்ததை கண்டு ரசிகர்கள் இவரது மரணம் கனவாக இருக்க கூடாதா என்று மனவேதனை அடைந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications