ராஜபக்சே வெற்றி பெறக்கூடாது.. வேண்டுதலோடு இலங்கை தேர்தலை கவனிக்கும் இந்தியா!
டெல்லி: இலங்கையில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை இந்தியா மிகவும் உன்னிப்போடு கவனித்து வருகிறது.
8 மாதங்கள் முன்பு, இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித்து சிறிசேனா அதிபரானார். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சே, தோல்விக்கு பழிதீர்த்து பிரதமராகும் கனவிலுள்ளார்.

சிறிசேனா மற்றும் ராஜபக்சே ஒரே கட்சியை சேர்ந்த பகைவர்கள். எனவே, ராஜபக்சேவுக்கு தேர்தலில் சீட் கிடைத்துவிட கூடாது என்பதற்கு சிறிசேனா எவ்வளவோ முயற்சி எடுத்து பார்த்தார் முடியவில்லை. எனவே தனது கட்சி தோற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டுள்ளார்.
அதேநேரம், ராஜபக்சே சீனாவுக்கு ஆதரவானவர் என்பதால், இந்தியா இந்த தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறது. சிறிசேனா மற்றும் பிரதமர் ரனில்விக்ரமசிங்கே கூட்டணிதான் இந்தியாவுக்கு வசதியாக உள்ளது. ராஜபக்சே பிரதமரானால் சீனாவுடன் நேசக்கரம் நீட்டுவார், இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல்களை நிறுத்த ஏற்பாடு செய்வார் என்றெல்லாம் இந்தியா கவலையடைந்துள்ளது.
சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க, இலங்கைக்கு சில விஷயங்களில் நெருக்கடி தரமுடியாத சூழல் இந்தியாவுக்கு ஏற்பட்டுவிடும். அவ்வாறு ஏற்பட்டால், தமிழர், மற்றும் மீனவர் பிரச்சினைகளில் மோடி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அவப்பெயர் வந்துவிடும். எனவே தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications