”ஸ்டார்ப் அப்... ஸ்டாண்ட் அப்” திட்டங்கள் விரைவில் அறிமுகம் - அருண் ஜெட்லி தகவல்
விசாகபட்டினம்: நாட்டில் உள்ள பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் ஒவ்வொரு கிளைகளிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு கடன் உதவி அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
விசாகபட்டினத்தில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.
பெண் தொழில் முனைவோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டமும், புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் இந்தியா திட்டமும் தொடங்கப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவு, மற்ற பொருட்கள் விலை சரிவு ஆகியவை நமது பொருளாதாரத்துக்கு சாதகமாக இருப்பதாகவும், நம்முடன் போட்டி போடும் நிலையில் உள்ள நாடுகள் மிகுந்த சவால்களை சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையி்ல், பொருளாதாரத்தில் சீர்திருத்தம் அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications