பிற நாடுகளைவிட இந்தியாவில் முஸ்லிம்கள் நன்றாக உள்ளார்கள்.. "சர்ட்டிபிகேட்" கொடுத்த லஷ்கர் தீவிரவாதி
டெல்லி: பிற நாடுகளைவிட இந்தியாவில் இஸ்லாமியர்கள் நிலைமை மோசம் இல்லை என்பதால், இந்தியா மீது 'புனித போர்' தொடுக்க வேண்டாம் என்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அப்துல் அஜிஸ் என்ற, அஷ்ரஃபி கிட்டா தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவால் தேடப்பட்டு வந்த கிட்டா, சவுதி அரேபியாவில் சிக்கினார். அவரை தெலுங்கானா போலீசார் கைது செய்துளளனர். 1997ம் ஆண்டில், இந்தியா மீது புனிதப்போர் தொடுக்க பிற லஷ்கர் தீவிரவாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக, கிட்டாவிடம் நெருக்கமாக இருந்த முகமது இஸ்மாயில் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சலிம் ஜுனைட் ஆகியோர் கிட்டாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால், பிற நாடுகளில் வாழும் முஸ்லிம்களை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நன்கு வாழ்வதாக கூறிய கிட்டா புனிதப்போர் தேவையில்லை என்று மறுத்தாராம்.
ஆனால், சவுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான சர்வதேச இஸ்லாமிக் ரிலீப் அமைப்பின் இயக்குநர், ஷேக் அகமது, கிட்டாவிடம் தொடர்ந்து பேசி, பாபர் மசூதி இடிப்பை சுட்டிக்காட்டி, இந்தியாவில் தாக்குதல் நடத்த சம்மதிக்க வைத்துள்ளார். இத்தகவல் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications