கேரளாவில் அராஜகம்.. தமிழக லாரி மீது சரமாரி கல்வீச்சு.. கிளீனர் பலி!
தமிழக லாரி மீது கேரளாவில் நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலக்காடு தமிழக லாரி மீது கேரளாவில் நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கேரளா சென்ற லாரி
எனினும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் ஏற்றிச்செல்லும் பெரும்பாலான லாரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்றிரவு காய்கறி ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் ஆலப்புழா என்ற பகுதிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.

தமிழக லாரி மீது கல்வீச்சு
கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த வாளையார் அருகே கஞ்சிக்கோடு பகுதியில் லாரி மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்தப்பட்டது. 10க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் லாரி மீது சரமாரியாக கற்களை வீசினர்.

கிளீனர் உயிரிழப்பு
இந்த தாக்குதலில் லாரியில் கிளீனராக இருந்த முபாரக் பாட்ஷா என்பவர் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த கிளீனரைஅருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓட்டுனர் நூருல்லா கொண்டு சென்றார். மேல்சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிளீனர் பாட்ஷா உயிரிழந்தார்.

லாரி ஸ்ட்ரைக்
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் சூழலில் லாரி இயக்கியதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்
மேலும், உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கிளீனர் பாட்ஷா, கோவையை அடுத்த அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications