தக்காளியும் கிடையாது... ஒன்னும் கிடையாது... பாகிஸ்தானுக்கு டாட்டா காட்டிய ம.பி விவசாயிகள்
போபால்: பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் சுங்கவரியை 200 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து அதிக அளவில் பழங்கள், சிமென்ட் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில், அந்நாட்டுக்கு ரூ.3,482 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

தக்காளி ஏற்றுமதி நிறுத்தம்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வகையில், பணம் முக்கிய இல்லை, தேசப் பக்தியே முக்கியம் என மத்தியப்பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் பெத்லவாட் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை நிறுத்திக் கொண்டனர்.

தக்காளிகளுக்கு கிராக்கி
பாகிஸ்தானில் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்ட (25 கிலோ) தக்காளியை அவர்கள் குறைந்த விலையில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்து வந்தனர். ஒவ்வொரு தக்காளியும் 150 கிராம் எடை கொண்டதாகவும், பார்ப்பதற்கு பெரிதாகவும் இருப்பதால், மத்தியப்பிரதேச தக்காளிகளுக்கு பாகிஸ்தானில் நல்ல கிராக்கி உள்ளது.

முதல்வர் பாராட்டு
விவசாயிகளின் இந்த முடிவை வரவேற்றுள்ள அம்மாநில முதல்வர் கமல் நாத், லாபத்தை பெரிதாக நினைக்காமல், தேசத்திற்காக விவசாயிகள் எடுத்த முடிவுக்கு சல்யூட் என்று தெரிவித்துள்ளார். ஜபுவா மாவட்ட விவசாயிகளின் செயல், ஒவ்வொரு குடிமகனும் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்த உத்வேகத்தை கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தக்க பாடம் புகட்ட வேண்டும்
பாகிஸ்தானில் விற்பனையாகும் 70 சதவீத காய்கறிகள் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 40 டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. அவைகளில் 90 சதவீதம் அளவிற்கு பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை. தேசமே முக்கியம். நாங்கள் ஒன்றும் பாகிஸ்தானை நம்பி இல்லை. ரவி மற்றும் சிந்து வழியாக வழங்கப்படும் நீரை மத்திய அரசு நிறுத்த வேண்டும். பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று ஜபுவா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications