ராக்கிங் கொடுமை: கோமாவில் இருந்த கேரள மாணவர் மரணம் - 6 சீனியர் மாணவர்கள் தலைமறைவு
பெங்களூர்: பெங்களூரில் தனியார் கல்லூரியில் நடந்த ராக்கிங் கொடுமையால் கேரள மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அம்மாணவரின் உயிரிழப்புக்குக் காரணமாக ஆறு சீனியர் மாணவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சையத் இப்ராஹிம் - ஹாரிபா தம்பதியினரின் மகன் அஹாப் இப்ராஹிம் (வயது 21). இவர், பெங்களூர் சோளதேவனஹள்ளி அருகே எசருகட்டா மெயின் ரோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி கல்லூரி விடுதியில் உள்ள குளியல் அறையில் தலையில் பலத்த காயத்துடன் மயங்கி நிலையில் கிடந்த அஹாப்பை மீட்டு சக மாணவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ‘கோமா' நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.
மகனின் உடல்நிலைக் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அஹாப்பின் பெற்றோர், ராக்கிங் தான் தங்களது மகனின் நிலைமைக்குக் காரணம் என குற்றம் சாட்டினர். ஆனால், மகனின் கல்வியைக் கருத்தில் கொண்டு அவர்கள் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 6-ந் தேதி, மேல் சிகிச்சைக்காக கேரளா மாநிலம் கொச்சியில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அஹாப் மாற்றப்பட்டார். அங்கு அவர், தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனளிக்காமல் கோமா நிலையிலேயே கடந்த 10ம் தேதி உயிரிழந்தார் அஹாப். அதனைத் தொடர்ந்து கொச்சி போலீஸ் நிலையத்தில் அஹாப் படித்த கல்லூரியைச் சேர்ந்த 6 சீனியர் மாணவர்கள் மீது புகார் அளிக்கப் பட்டது.
அதன்பேரில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே அஹாப்பின் மரணம் குறித்து தகவலறிந்த சம்பந்தப்பட்ட 6 மாணவர்கள் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
அவர்களை கேரளா போலீசார் தேடிவருகிறார்கள். மாணவர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெங்களூர் மற்றும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications