டெல்லி போலீஸை கண்டித்து போராட்டத்தில் குதிப்போம்... மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை
சென்னை: ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக் கழக மாணவர்கள் மீது டெல்லி போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தில் குதிப்போம் என தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வலுவடைந்தது
குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த பாசிச சட்டத்திற்கு எதிராக ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக்கழக மாணவர்களும் ,கல்லூரி மாணவர்களும், இப்போராட்டத்தில் இணைந்துள்ளார்கள். இப்போராட்டங்கள் வலுவடைந்து வருகிற
நிலையில் இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைக்கிறது மத்திய அரசு.

கோரமுகம்
எனவே டெல்லியில் போராடிய ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக் கழக மாணவர்கள் மீது தனது ஏவலாட்களான டெல்லி காவல்துறையை
ஏவி விட்டிருக்கிறதுஅரசு.அமைதியான முறையில் போராடிய மாணவர்கள்மீது தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் பாசிசத்தின் கோரப்பற்களை
கோரமுகத்தை காட்டியிருக்கிறது டெல்லி காவல்துறை.

டெல்லி போலீஸ்
முக்கியமாக போராடும் மாணவிகள் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்டிருக்கிறார்கள். பல்கலைக் கழக துணை வேந்தரின் அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் விடுதிக்குள்ளும் நுழைந்து வெறியாட்டம் ஆடியிருக்கிறது டெல்லி காவல்துறை.

எச்சரிக்கை
போராடும் ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக் கழக மாணவர்களோடு தோளோடு தோள் நிற்கிறது நமது கூட்டமைப்பு. அது மட்டுமன்றி இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்; இல்லையேல் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு குதிக்கும் என்றும் எச்சரிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications