என்ன இதெல்லாம்..? பிரதமர் மோடி பேச்சை கேட்காத மாணவர்களுக்கு அபராதம்.. பள்ளி மீது பரபர புகார்!
டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க வராத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ரூ.100 அபராதம் விதித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கு நோட்டிஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராக முதல் முறை பதவியேற்றார். அதன் தொடர்ச்சியாக மக்களுடன் வானொலி வாயிலாக 'மன் கி பாத்' நிகழ்வில் பேசி வருகிறார். இதன் முதல் ஒலிபரப்பு கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி விஜயதசமி பண்டிகையின்போது தொடங்கியது.

வாரந்தோறும் ஒவ்வொரு ஞாயிறு அன்று பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் வானொலி வாயிலாகப் பேசி வருகிறார். அதில் பலரால் கவனிக்கப்படாத மக்கள் சேவகர்கள், சாதனையாளர்களை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளார். மனதின் குரல் உரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரையும் அடையாளப்படுத்தி உள்ளார் பிரதமர் மோடி.
மன் கி பாத்தின் 100வது எபிசோட் கடந்த ஞாயிறன்று ஒலிபரப்பானது. இந்த நிகழ்ச்சியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதனை ஒலிபரப்பியது பாஜக அரசு. பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களிலும் மன் கி பாத் 100வது எபிஸோட் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பள்ளி ஒன்றில், பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க வராத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ரூ.100 அபராதம் விதித்ததாக புகார் எழுந்துள்ளது. 'மன் கி பாத்' ஒலிபரப்பான அன்று பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அல்லது மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மாணவர்களுக்கான பள்ளியின் வாட்ஸ் அப் குரூப்பில் அபராதத்திற்கான இந்த உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் புகார் தெரிவிக்க, இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை அந்த பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி, 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications