ஆம் ஆத்மி கட்சிக்கு Avaaz.org அமைப்பு 4 லட்சம் டாலர் கொடுத்தது: சு.சுவாமி குற்றச்சாட்டு

கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால் கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே பெருமளவு அக்கட்சி செலவு செய்து வருவது சர்ச்சையை கிளப்பிவிட்டது.
இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சிக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. உடனே ஆம் ஆத்மி கட்சியினரோ, விசாரணையை எதிர்கொள்கிறோம். ஆனால் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு நிதி எங்கே வருகிறது என்றும் விசாரிக்க வலியுறுத்தியினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, http://www.avaaz.org/en/ என்ற அமைப்பு மூலமாகவே ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக 4 லட்சம் டாலர் பணம் ஆம் ஆத்மி கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்பு அரபு நாட்டினருக்கும் உதவி செய்திருக்கிறது. இந்த அமைப்பான சமூக கிளர்ச்சிகளுக்காகவே நிதி உதவி செய்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியைப் பார்த்து அச்சப்படுகிற காங்கிரஸ் கட்சியின் இன்னொரு முகமாக ஆம் ஆத்மி கட்சி செயல்படுகிறது. 13 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றதாக கெஜ்ரிவால் கூறுகிறார். ஆனால் யார் யாரிடம் இருந்து பணம் பெற்றதாக அவர் தெரிவிக்கவில்லை.
ஒரே வாரத்தில் 19 கோடி ரூபாயை வசூலித்திருப்பது சாத்தியம் இல்லை. அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவர்தான் ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி கொடுத்திருக்கிறார். இதுபற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றார்












Click it and Unblock the Notifications