ஜெருசலேம் விஷயத்தில் இந்தியா தவறான முடிவு எடுத்து விட்டது.. சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்
ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் விவகாரத்தில் இந்தியா தவறான முடிவு எடுத்துவிட்டதாக பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதற்கான வாக்கெடுப்பு இரண்டு நாட்கள் முன்பு ஐநா சபையில் நடந்தது.
இதில் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களித்தது. இன்னும் சில நாடுகளும் அமெரிக்காவிற்கு எதிராக வாக்கு அளித்து இருந்தது.
அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா வாக்களித்தது மிகவும் தவறான முடிவு என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்தியா இதன் மூலம் பெரிய தவறு ஒன்றை செய்து இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஜெருசலேம் விவகாரம்
இஸ்ரேலின் தலைநகராக டெல் அவிவ் என்ற பகுதி இருந்து வந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக கூறினார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இதனால் ஐநா சபையில் இதுகுறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

தூதரகம்
அமெரிக்கா இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் இருந்த தனது தூதரகத்தை உடனே ஜெருசலேம் பகுதிக்கு மாற்றியது. இதையடுத்து பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி ''அமெரிக்கா தனது தூதரகத்தை மாற்றியது போலவே இந்தியாவும் தனது தூதரகத்தை ஜெருசலேம் பகுதிக்கு மாற்றவேண்டும்'' என்று கூறியிருந்தார்.

ஐநா வாக்கெடுப்பு
ஐநாவில் இந்த விவகாரம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 128 நாடுகள் மொத்தம் அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிராக வாக்களித்து இருந்தது. மொத்தம் 9 நாடுகள் மட்டும் அமெரிக்கவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்தியாவும் இந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவிற்கு எதிராக வாக்களித்து இருந்தது.

கண்டனம்
இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்கும் என்றும் எதிர்பார்த்த சுவாமி இதனால் கோபம் அடைந்துள்ளார். பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் ''இந்தியா மிகவும் தவறான முடிவை எடுத்துவிட்டது. இந்த விஷயத்தில் இந்தியா அமெரிக்காவை ஆதரித்து இருக்க வேண்டும். இந்தியா செய்தது பெரும் பிழை'' என்று ஆளும் பாஜக அரசு குறித்து பேசியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications