ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் சு.சுவாமி 11 பக்க வாதத்தை தாக்கல் செய்தார்
ஜல்லிக்கட்டு வழக்கில் சு.சுவாமி தம்முடைய வாதத்தைத் தாக்கல் செய்தார். 11 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை சு.சுவாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி 11 பக்கம் எழுத்துப்பூர்வ வாதத்தைத் தாக்கல் செய்தார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது அனைத்து தரப்பும் தங்களது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சார்பாக ஆஜரான பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி இன்று தமது வாதத்தை 11 பக்கமாக எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications