காந்தியை சுட்ட கோட்சேவுக்கு "இத்தாலி" துப்பாக்கி கிடைத்தது எப்படி? சு.சுவாமி கிளப்பும் புது பூதம்!!
டெல்லி: மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சேவிடம் இத்தாலி நாட்டு துப்பாக்கியைக் கொடுத்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி. இதனால் மகாத்மா காந்தி படுகொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
|
இத்தாலி துப்பாக்கி
காந்தியை கோட்சே சுட்டு கொன்ற போது பயன்படுத்தியது இத்தாலி நாட்டு பெரட்டா பிஸ்டல் ஆகும். பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் மட்டுமே அந்த ரக துப்பாக்கியை வைத்திருந்தனர்.
|
இன்னும் விசாரிக்கவில்லை
கோட்சேவுக்கு இந்த இத்தாலி துப்பாக்கியை கொடுத்தது யார் ? இது கோட்சே கைக்கு எப்படி போனது? இது குறித்து விசாரிக்கப்படாமலே இருக்கிறது.
|
அந்த ஒரு குண்டு
கோட்சே 3 குண்டுகளை பிரயோகித்துள்ளார் . ஆனால் 4 குண்டுகள் இருப்பதாக சில செய்தி நிறுவனங்கள் புகைப்படம் வெளியிட்டுள்ளன . விசாரணையில் 3 குண்டுகள் இருந்தது மட்டுமே கூறப்படுகிறது. 4 வது குண்டு எப்படி வந்தது ? காந்தியின் இதயபகுதியை துளைத்த குண்டு எது ? பிரேத பரிசோதனை அறிக்கை சொல்வது என்ன?
|
கோட்சே கைதும் விடுதலையும்
காந்தியை நாட்டு வெடிகுண்டு மூலம் கொலை செய்ய முயற்சித்ததாக 1948ஆம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி கோட்சே கைது செய்யப்பட்டார். பின்னர் ஜனவரி 22-ந் தேதியே கோட்சே மவுண்ட்பேட்டனால் விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து மீண்டும் விசாரிக்க முறையிடுவேன்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications