மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.5.57 உயர்வு!
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.5.57-ஆக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. அதே சமயம், மானியமில்லா சமையல் எரிவாயு விலை ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ. 5.57-ஆக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதனால் ரூ.434.93-க்கு விற்கப்படும் மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.440.50-ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச பெட்ரோலிய சந்தையில் விலை நிர்ணய நிலவரத்தின்படி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை உயர்த்துவதும், குறைப்பதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரத்துக்குட்பட்டதாக உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.5.57 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன. இதனால் ரூ.434.93-க்கு விற்கப்படும் மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.440.5-ஆக உயர்ந்துள்ளது.
அதே வேளையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையோ ரூ.14.50- ஆக குறைக்கப்பட்டுள்ளதால் அவை ரூ.723-க்கு விற்கப்படும்.
கடந்த 2016-இல் செப்டம்பர் மாதம் டெல்லியில் ரூ.466.50-ஆக இருந்த மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.723 -ஆக உள்ளது. மேலும் விமானத்துக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் விலையில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 1000 லிட்டர் விமான பெட்ரோல் ரூ.2,811 குறைந்து ரூ.51, 248-க்கு விற்கப்படும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது போல் குறைத்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications