சுனந்தா புஷ்கர் மகனிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம்!
டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது முதல் கணவருக்கு பிறந்த மகனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு மர்மமான முறையில் டெல்லி ஹோட்டலில் இறந்தார். விஷம் ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங், சசிதரூர் வீட்டு வேலைக்காரர்கள் உட்பட பலரிடமும் இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, சுனந்தா புஷ்கரின் மகன் சிவ் மேனனிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர் சுனந்தாவின் முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த மகனாகும். வெளிநாட்டில் வசிக்கும் சிவ்மேனனை விசாரணைக்கு ஆஜராக அழைத்துள்ளது போலீஸ். இன்றே அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை விசாரணை தொடங்கவில்லை.












Click it and Unblock the Notifications