சசி தரூரின் மனைவி சுனந்தா மர்ம மரணம்- டெல்லி ஹோட்டலில் உடல் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

sunanda pushkar
டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தி லீலா பேலஸ் ஹோட்டலின் 345-வது அறையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

தனது மனைவியின் மரணம் குறித்து தரூர், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தனது கணவருக்கும், பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக பரபரப்புப் புகார் கூறியிருந்தார் சுனந்தா. தனது கணவரை அபகரிக்க தரார் முயல்வதாகவும், இதுதொடர்பாக அவர்களுக்கிடையே இருந்த டிவிட்டர் மற்றும் தனிப்பட்ட மெசேஜ்களையும் அவர் வெளியிட்டார்.

ஆனால் நேற்று திடீரென சுனந்தாவும், சசி தரூரும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் தாங்கள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதாகவும், தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளித்து அனைவரும் அதிலிருந்து விலகியிருக்கும்படியும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் சுனந்தாவின் மர்ம மரணம் சம்பவித்துள்ளது. சசி தரூரும், சுனந்தாவும் பெரும் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 2010ம் ஆண்டு கேரளாவில் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+