சுனந்தாவுக்கு விஷம் கொடுத்தவர் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவு?
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கருக்கு விஷம் கொடுத்தவர் அவருக்கு தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கருக்கு அவருக்கு தெரிந்த யாரோ தான் விஷம் கொடுத்திருக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் எதற்காக சுனந்தா கொல்லப்பட்டார் என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுனந்தாவின் உடற்கூறுகள் வெளிநாட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் விசாரணையில் கிடைக்கும் தகவலை தான் நம்ப வேண்டியுள்ளது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுனந்தா
சுனந்தா தனது கடைசி நாட்களில் சந்தோஷமாக இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் தரூரோ தனக்கும் சுனந்தாவுக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுவரை விசாரிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சுனந்தா சந்தோஷமாக இல்லை என்றே தெரிவித்துள்ளனர்.
ஊசி
சுனந்தாவின் உடலில் 15 காயங்கள் உள்ளன. அவருக்கு தெரிந்த யாரோ தான் அவருக்கு விஷத்தை கொடுத்திருக்க வேண்டும். ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை ஆய்வு செய்து சம்பவம் நடந்த அன்று யார், யாரெல்லாம் சுனந்தாவின் அறைக்கு சென்றார்கள் என்பதை கிட்டத்தட்ட தெரிந்துள்ளோம். அந்த நபர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தரூர்
சசி தரூரிடம் விசாரணை நடத்துவதில் வேண்டும் என்றே தாமதம் செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை விசாரிப்பது இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியம். ஆனால் அவரை விசாரிக்கும் முன்பு நாங்கள் தேவையான தகவல்களை எல்லாம் சேகரிக்க விரும்புகிறோம் என்று போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் அறிக்கையை மாற்றி எழுத தரூர் ஏதாவது முயற்சி செய்தாரா என்பதையும் போலீசார் கண்டுபிடிக்க உள்ளனர். ஐபிஎல் ஊழல் கோணத்திலும் தரூரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications