டெல்லிக்கு விமானத்தில் சண்டை போட்டுக் கொண்டே சென்ற சுனந்தா, தரூர்
டெல்லி: கடந்த 15ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் மத்திய அமைச்சர் சசி தரூரும், அவரது மனைவி சுனந்தாவும் விடாமல் சண்டை போட்டுக் கொண்டே சென்றுள்ளனர்.
கடந்த 17ம் தேதி டெல்லி ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர்.
முன்னதாக கடந்த 15ம் தேதி அவர்கள் இருவரும் திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்பினர். விமானத்தில் அவர்கள் தரூரின் மற்றொரு காதல் என்று கூறப்படும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளரான மெஹர் தரார் பற்றி சண்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளனர். அவர்களின் வாக்குவாதத்தை சக பயணிகள் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனிஷ் திவாரி தரூர் தம்பதி பயணம் செய்த அதே விமானத்தில் மும்பையில் ஏறியுள்ளார். அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருந்ததை திவாரியும் பார்த்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்திலும் தரூரும், சுனந்தாவும் சண்டையை தொடர்ந்துள்ளனர். சுனந்தா இறக்கும் முன்பு தரூர் தனது மனைவியுடன் தொடர்ந்து 72 மணிநேரம் தொடர்ந்து சண்டை போட்டுள்ளார்.
கடந்த 6 மாத காலமாக அவர்களுக்கு இருந்து வந்த பிரச்சனை 2 நாட்களாக பூதாகரமாக இருந்துள்ளது என்று போலீசார் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications