ஆதார் செல்லும்.. அரசு சேவைகளுக்கு கட்டாயம்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
Recommended Video

டெல்லி: அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதனால் ஆதார் எண் கட்டாயமாகிறது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர்.
நீதிபதி சிக்ரி 40 பக்கம் கொண்ட தீர்ப்பை முதலில் வாசித்தார். தீர்ப்புக்குப் பின்னர் ஆதார் எண் அரசு சேவைகளுக்கு கட்டாயம் என்ற தீர்ப்பை அவர் அறிவித்தார்.

நீதிபதி சிக்ரி தீர்ப்பின் விவரம்:
இந்தியாவில் கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது ஆதார்தான். ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவமானது என்பதே சரியானது. ஆதார் மற்ற ஆவணங்களை போன்றதல்ல. தனி நபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டுமே பிரச்சனையாக உள்ளது.
[அரசுக்கு கட்டாயம்.. தனியாருக்கு தேவையில்லை.. ஆதார் தீர்ப்பின் முழு விபரம்! ]
ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன. ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது. கையெழுத்தை கூட போலியாக போடலாம். ஆதார் எண்ணை போலியாக்க முடியாது.
தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது சட்டவிரோதம். பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். ஆதார் இல்லை என்பதற்காக தனிமனித உரிமைகள் மறுக்கப்படக் கூடாது.

அதேநேரத்தில் வங்கி கணக்கு தொடங்க செல்போன் இணைப்பு பெற ஆதாரை கட்டாயமாக்க கூடாது. சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது. கல்வி என்பதை அடிப்படை உரிமை என்பதால் அதில் ஆதாரை கொண்டு வரக்கூடாது. அரசியல் சாசன அமர்வுப்படி ஆதார் செல்லும் என்று நீதிபதி ஏகே சிக்ரி உள்ளிட்ட 3 நீதிபதிகளின் தீர்ப்பில் தெரிவித்தார்.

-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications