குஜராத்: யாருக்கு ஓட்டுப் போட்டோம் சீட்டை ஆய்வு செய்ய கோரிய காங். மனு தள்ளுபடி!
வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டுகளை சோதனை செய்ய கோரிய காங்கிரஸின் வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது.
அகமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும், அதில் இணைக்கப்பட்டிருந்த யாருக்கு ஓட்டு போட்டோம் என்கிற சீட்டுகளையும் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற காங்கிரஸின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. இதில் பல்வேறு இடங்களில் வாக்கு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், குஜராத்தில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை சோதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
அந்த வழக்கில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளில் முறைக்கேடு நடப்பதாகவும், அதனால் யாருக்கு மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் என்கிற ஒப்புகை சீட்டையும், வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒப்பிட்டு ஆராயவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரப்பட்டிருந்தது.
இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று சொல்லி தள்ளுபடி செய்தனர். மேலும், தேர்தல் சீர்திருத்தங்களுக்காக வேண்டுமானால் தனியாக மனு செய்யலாம் என்று காங்கிரஸிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications