காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கோரும் வழக்கு.. ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட்
Recommended Video

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏ தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.
ஜம்மு-காஷ்மீரின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் யார் என்பதை வரையறை செய்யும் சட்டப்பிரிவு 35ஏ, பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் சொத்துக்கள் வாங்குவதை தடுக்கும் வகையில் உள்ளது. இதையெல்லாம் எதிர்த்து இந்த சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்கக் கோரி என்ஜிஓ தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 5ஆம் தேதி வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் வழக்கு விசாரணை வந்தபோது, மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் ஒருவர் அன்று வரவில்லை என்பதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷ்கர் மேத்தா, காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளில் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், உள்ளாட்சி தேர்தல் அமைதியாக முடியட்டும். அதன்பிறகு இதுபற்றி விசாரிக்கலாம் என்று கோரிக்கைவிடுத்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணை 2019ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு வருவதையொட்டி, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளிலும் ஜம்மு பிராந்தியத்திலும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தொடரவேண்டும் என்பது போராட்டக்காரர்கள் கோரிக்கை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications