வரதட்சணை புகார் அளித்தால் உடனே கைது செய்யலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
Recommended Video

டெல்லி: வரதட்சணை புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம், இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மணமான பெண்களை கொடுமைப்படுத்தும் சட்டப்பிரிவு 498ஏ தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில், புகார் மீது உண்மை உள்ளதா என்பதை சோதித்து பார்க்காமல் கைது செய்ய கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. வரதட்சணை புகார் தொடர்பாக மாவட்ட வாரியாக குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து உத்தரவை மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது 2 நீதிபதிகள் அமர்வு கூறிய தீர்ப்பை மாற்றி, வரதட்சணை புகார் கொடுத்ததுமே கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே நேரம், குற்றச்சாட்டுக்கு ஆளாவோருக்கு, முன்ஜாமீன் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட கோர்ட்கள் முடிவு செய்யலாம். மேலும், வரதட்சணை புகார்களை விசாரிக்க மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்க தேவையில்லை என கூறி, முந்தைய அமர்வு வழங்கிய தீர்ப்பை மாற்றி உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications