வரதட்சணை புகார் அளித்தால் உடனே கைது செய்யலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
Recommended Video

டெல்லி: வரதட்சணை புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம், இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மணமான பெண்களை கொடுமைப்படுத்தும் சட்டப்பிரிவு 498ஏ தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில், புகார் மீது உண்மை உள்ளதா என்பதை சோதித்து பார்க்காமல் கைது செய்ய கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. வரதட்சணை புகார் தொடர்பாக மாவட்ட வாரியாக குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து உத்தரவை மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது 2 நீதிபதிகள் அமர்வு கூறிய தீர்ப்பை மாற்றி, வரதட்சணை புகார் கொடுத்ததுமே கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே நேரம், குற்றச்சாட்டுக்கு ஆளாவோருக்கு, முன்ஜாமீன் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட கோர்ட்கள் முடிவு செய்யலாம். மேலும், வரதட்சணை புகார்களை விசாரிக்க மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்க தேவையில்லை என கூறி, முந்தைய அமர்வு வழங்கிய தீர்ப்பை மாற்றி உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications