மலேகான் வழக்கு: சாத்வி பிரக்யா ஜாமீன் கோரிக்கையை பரிசீலிக்கலாம்- சுப்ரீம்கோர்ட்; விடுதலையாகிறார்...
டெல்லி: மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சாத்வி பிரக்யா சிங் தாகுர், லெப். கேணல் புரோகித் ஆகியோருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படாத நிலையில் ஜாமீன் வழங்குவது குறித்து விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மலேகானில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் பலியாகினர்.
முதலில் இந்த சம்பவத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வு அமைப்பினர், இந்த சம்பவத்துக்கு இந்துத்துவா தீவிரவாதிகளே காரணம் என கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து சாத்வி பிரக்யா சிங் தாகுர் மற்றும் லெப். கேணல் புரோகித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் முடிவில், சாத்வி பிரக்யா, புரோகித் உட்பட 4 பேர் மீது மகாராஷ்டிரா அரசின் சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த சட்டத்தின் கீழ் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டதற்கு இதுவரையில் வலுவான எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதனால் இவர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆகையால் இவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனர்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகேஷ் தாவ்தே சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதையும் நீதிபதிகள் உறுதி செய்தனர். ராகேஷ் மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிவுக்கவும் விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications