டாக்டர்களின் அலட்சியத்தால் பார்வை இழந்த சென்னைப் பெண்... ரூ. 1,80,00,000 வழங்க தமிழக அரசுக்கு உத்தரவ
டெல்லி: மருத்துவர்களின் அலட்சியத்தால் பார்வை இழந்த சென்னை பெண்ணுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரது மனைவி லட்சுமி. இவருக்கு கடந்த 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குறை மாதத்தில் பிறந்ததால் 25 நாட்கள் அக்குழந்தையை இன்குபேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்த சிகிச்சையினால் குழந்தை விழித்திரை பாதிக்கப்படும் ஆபத்து இருந்தும், அதனை தடுப்பதற்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், சில மாதங்களில் அக்குழந்தையின் விழித்திரை பாதிப்படைந்து, முற்றிலும் பார்வை பறி போனது.
இதையடுத்து மருத்துவர்கள் அலட்சியத்தால் பார்வையை இழந்த தமது பெண் குழந்தைக்கு இழப்பீடு கோரி தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகுமார் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நுகர்வோர் நீதிமன்றம் தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
ஆனால் இந்த இழப்பீடு குறைவாக இருப்பதால் அதனை அதிகரிக்க கோரி, கிருஷ்ணகுமார் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று தீர்பளித்தது. அதில், தமிழக அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், பார்வை இழந்த பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.1 கோடியே 38 லட்சம் , மற்றும் மருத்துவ செலவுக்காக ரூ.43 லட்சமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
18 ஆண்டுகளுக்கு பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைக்க இருக்கும் இந்த இழப்பீட்டு தொகை இதுவரை நாட்டில் வழங்கப்பட்ட அதிகப்பட்ச இழப்பீடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications