For Daily Alerts
Just In
தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்யலாம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி
Recommended Video
தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்யலாம்..சுப்ரீம் கோர்ட் அதிரடி- வீடியோ
டெல்லி: தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணை கொலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருணைக் கொலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருணைக்கொலை செய்வதற்கு வழிமுறைகளையும் வகுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உயிர்பிழைக்க வழியில்லாதவர்களுக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்டவற்றைகளை நிறுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Comments
English summary
Supreme court permits Passive Euthanasia With Guidelines. The Supreme Court pronounced its verdict on Friday on a plea seeking legal sanction for passive euthanasia under which a person suffering from a terminal disease and in last stage of life with no chance of recovery is allowed not to sustain life through artificial support.
Story first published: Friday, March 9, 2018, 11:24 [IST]