மருத்துவ நுழைவு தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: மருத்துவ கல்விக்கு இவ்வாண்டு நுழைவு தேர்வு நடத்துவதை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தேர்வை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்கள் தொடர்ந்த சீராய்வு மனுவின் மீதான விசாரணையிலும் பொது நுழைவு தேர்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இம்மாநிலங்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததன் காரணமாக, 6 மாநிலங்களிலும் நுழைவு தேர்வை இவ்வாண்டு ரத்து செய்து அவசர சட்டம் பிறப்பிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
சிறு இழுபறிக்கு பிறகு இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் வழங்கினார். பிளஸ் டூ மதிப்பெண்ணை வைத்து கவுன்சிலிங் மூலம் மருத்துவ கல்லூரிகளில் இட சேர்க்கை நடைபெறும் தற்போதைய முறையே தமிழகத்தில் தொடரும் என்பதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், அவசர சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழலை வெளியில் கொண்டு வந்த ஆனந்த் ராய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தார். இதை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவசர சட்டத்தை தற்போதைக்கு ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது.
தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு முழுமையாக மறுக்கவில்லை. தற்போதைய நிலையில் ஏதேனும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தால், அதனால் குழப்பமே ஏற்படும். எனவே இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications