ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.. மாநிலத்தில் 2 அதிகார மையங்கள் இருக்க கூடாது.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி: மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு 3 வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பதே ஒரே வாய்ப்பு என்றும் தீர்ப்பளித்திருக்கிறது.
சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், ஆளுநர் தரப்புக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி உச்சநீதிமன்றம் தரப்பில், ஆளுநர் நீண்ட காலத்திற்கு மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதனை சட்டசபைக்கு ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும். நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால், அதனை சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
ஒரு சட்டப்பிரிவுக்கு 2 வகையான வாய்ப்பு இருந்தால், எது சுமூக நிலையோ, அதையே பின்பற்ற வேண்டும். ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதானை ஆய்வு செய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது தான். ஆளுநர் காரணத்தை தெரிவிக்காமல் நீண்ட காலம் மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.
அரசியல் சட்டம் சில தனி உரிமைகளை ஆளுநருக்கு வழங்கி இருக்கிறது. காரணமின்றி மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், ஜனாதிபதிக்கு அனுப்பலாம் அல்லது சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம் ஆகிய 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. 3ல் ஒன்றை தேர்ந்தெடுப்பதே ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையுமே முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும். ஒரு மாநிலத்தில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்க கூடாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. மத்திய அரசு கூறுவதை போல் ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் 4வது வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications