சவுதி, குவைத்தில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ ஏற்பாடு - சுஷ்மா சுவராஜ்
டெல்லி: சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் வேலை இழந்து தவித்து வரும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா, குவைத் போன்ற அரேபிய நாடுகளில் வேலைக்கு சென்ற இந்தியர்கள் அங்கு வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

சவுதி நகரான ஜெட்டாவில் கடந்த 3 நாட்களாக சுமார் 800 இந்தியர்கள் வேலையை இழந்த நிலையில் உண்ண உணவின்றி தவித்து வரும் இந்திய தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு இந்திய வெளியுறவுத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுஷ்மா தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "சவுதி அரேபியாவில் வேலையை இழந்த இந்தியர்களுக்கு உணவு வழங்க கேட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக சவுதி அரேபியா மற்றும் குவைத் அதிகாரிகளுடன் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க மத்திய அமைச்சர் வி.கே.சிங் விரைவில் சவுதி அரேபியா செல்ல உள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications