இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் புறப்பட்டார் சுஷ்மா சுவராஜ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சென்றுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு சுஷ்மா சுவராஜ் முதல் முறையாக செல்கிறார் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Sushma Swaraj Leaves for Two-day Visit to Palestine, Israel

இஸ்ரேல் செல்லும் சுஷ்மா அந்நாட்டு மூத்த தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதனால் இரு தரப்பு உறவுகள் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ளது இந்தியா. இந்நிலையில், முதல்முறையாக இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சுஷ்மாவின் இந்த பயணம் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மையத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்ரேல் சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+