பதான்கோட் தாக்குதல் குறித்து விசாரிக்க பாக். குழு மார்ச் 27-ல் இந்தியா வருகை- சுஷ்மா ஸ்வராஜ்
பெகாரா: பதான்கோட் விமானப் படை தளம் மீது பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியது குறித்து விசாரிப்பதற்காக பாகிஸ்தான் குழுவினர் மார்ச் 27-ந் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நேபாள நாட்டில் உள்ள பெகாரா நகரில் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் பெகாரா சென்றுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்க வந்துள்ளவர்களுக்கு நேபாள அரசு சார்பில் நேற்று விருந்து அளிக்கப்பட்டது. அதில் சுஷ்மா சுவராஜ், சர்தாஜ் அஜீஸ் சந்தித்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை இருவரும் மீண்டும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பதான்கோட் தாக்குதல் உட்பட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
Pokhara: EAM Sushma Swaraj meets Sartaj Aziz (Advisor to Pak PM on Foreign Affairs) on sidelines of #SAARC meeting pic.twitter.com/9Dbf1Rj4aB
— ANI (@ANI_news) March 17, 2016
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மாஸ், பதான்கோட் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து சர்தாஜ் அஜீஸுடன் விவாதித்தோம். பதான்கோட் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த மார்ச் 27-ந் தேதியன்று பாகிஸ்தான் குழு இந்தியாவுக்கு வருகை தர உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications