இந்தியத் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்... கெர்ரியிடம் சுஷ்மா அதிருப்தி
டெல்லி: இந்தியத் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்த புகாருக்கு, இந்தியாவின் மதிப்பு குறையாத வகையில் இருதரப்பு உறவு தொடரும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பதிலளித்துள்ளார்.
இருநாட்டு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இந்தியா வந்தார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி.
நேற்று எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம், கல்வி மற்றும் வளர்ச்சி, பொருளாதாரம், வணிகம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இந்திய, அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது..

அப்போது, இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை, அமெரிக்க உளவு அமைப்புகள் கண்காணித்ததாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜான் கெர்ரியிடம் மத்திய அரசு கவலை தெரிவித்தது.
நேற்று மதியம் முதல் இரவு வரை, இரு தலைவர்களும் மேற்கொண்ட சந்திப்பின் போது, இந்தியாவின் கவலையை, அமைச்சர், சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
நட்பு நாடான அமெரிக்காவின் இந்தச் செயல் சரியானதல்ல எனச் சுட்டிக் காட்டிய சுஷ்மா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய மக்களை கோபமடையச் செய்திருப்பதாக அதிருப்தி தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ஜான் கெர்ரி, 'பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிற தகவல்கள் பரிமாற்றம் பரஸ்பரம் முக்கியமானது. இந்தியாவின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்திற்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருதரப்பு உறவு தொடரும்' என உறுதியளித்தார்.
மேலும், மும்பையில், 2008ல் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் கொண்டு வர, பாகிஸ்தான் அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும், கெர்ரியிடம் மத்திய அமைச்சர் சுஷ்மா வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications