இந்தியத் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்... கெர்ரியிடம் சுஷ்மா அதிருப்தி
டெல்லி: இந்தியத் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்த புகாருக்கு, இந்தியாவின் மதிப்பு குறையாத வகையில் இருதரப்பு உறவு தொடரும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பதிலளித்துள்ளார்.
இருநாட்டு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இந்தியா வந்தார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி.
நேற்று எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம், கல்வி மற்றும் வளர்ச்சி, பொருளாதாரம், வணிகம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இந்திய, அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது..

அப்போது, இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை, அமெரிக்க உளவு அமைப்புகள் கண்காணித்ததாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜான் கெர்ரியிடம் மத்திய அரசு கவலை தெரிவித்தது.
நேற்று மதியம் முதல் இரவு வரை, இரு தலைவர்களும் மேற்கொண்ட சந்திப்பின் போது, இந்தியாவின் கவலையை, அமைச்சர், சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
நட்பு நாடான அமெரிக்காவின் இந்தச் செயல் சரியானதல்ல எனச் சுட்டிக் காட்டிய சுஷ்மா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய மக்களை கோபமடையச் செய்திருப்பதாக அதிருப்தி தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ஜான் கெர்ரி, 'பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிற தகவல்கள் பரிமாற்றம் பரஸ்பரம் முக்கியமானது. இந்தியாவின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்திற்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருதரப்பு உறவு தொடரும்' என உறுதியளித்தார்.
மேலும், மும்பையில், 2008ல் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் கொண்டு வர, பாகிஸ்தான் அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும், கெர்ரியிடம் மத்திய அமைச்சர் சுஷ்மா வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications