விதிஷாவில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் சுஷ்மா சுவராஜ்.. கான்பூரில் முரளி மனோகர் ஜோஷி
டெல்லி: மத்தியபிரதேசம் விதிஷா தொகுதியில் சுஷ்மா சுவராஜ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இன்றுஅவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ் விதிஷா தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த தொகுதியில் சுஷ்மா சுவராஜை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய்சிங்கின் சகோதரர் லஷ்மன்சிங் போட்டியிடுகிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில் சுஷ்மா சுவராஜ் 3 லட்சம் வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவர் போபால் தொகுதியில் போட்டி இடுவார் என்று பேச்சு அடிப்பட்டது தனிக்கதை.
அதே போல, பாஜக தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, கான்பூர் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.இத்தொகுதியில் இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அனில் அஸ்வதி போட்டியிட உள்ளார்.












Click it and Unblock the Notifications