For Daily Alerts
Just In
தமிழக மீனவர் பிரச்சனை குறித்து விவாதிக்க இலங்கைக்கு பயணம்.... சுஷ்மா தகவல்
டெல்லி: தமிழக மீனவர் பிரச்சனை குறித்து விவாதிக்க தாம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் சென்றிருந்தார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் நேற்று விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அப்போது இலங்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், தமிழக மீனவர்கள் குறித்த பிரச்சனையை இலங்கையிடம் எழுப்பியுள்ளோம். தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பான கூட்டுக் குழு தயாரகி உள்ளது.
நான் இலங்கைக்கும் போக இருக்கிறேன் என்றார்.
இருப்பினும் சுஷ்மா ஸ்வராஜ் எப்போது இலங்கை செல்ல இருக்கிறார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Comments
English summary
External Affairs Minister Sushma Swaraj said that she will visit Srilanka for Tamil Fishermen issue.
Story first published: Tuesday, December 15, 2015, 13:56 [IST]