ஆளுநருக்கு காயம் ஏற்படுத்தவில்லை: சஸ்பென்ட் ஆன மகாராஷ்டிரா காங். எம்.எல்.ஏக்கள் விளக்கம்
மும்பை: மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை என்று அம்மாநில சட்டசபையில் இருந்து 2 ஆண்டுகாலம் சஸ்பென்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு காயம் ஏற்படுத்தியதாக காங்கிரசை சேர்ந்த ராகுல் போந்த்ரே, ஜெய்குமார் கோரே, விரேந்திர ஜெக்தாப், அப்துல் சத்தார் மற்றும் அமர் கலே ஆகிய 5 எம்.எல்.ஏ.க்கள் 2 ஆண்டுகளுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டை அவர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். மும்பையில் செய்தியாளர்களிடம் 5 எம்.எல்.ஏ.க்களும் கூறியதாவது:
எங்கள் மீதான மொத்த புகாருமே பாரதிய ஜனதா அரசால் ஏற்படுத்தப்பட்ட சதிசெயல் ஆகும். எங்கள் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த பாஜக எம்.எல்.ஏ. கிரிஷ் மகாஜனிடம் சாட்சியம் பெறப்பட்டது.
ஆனால் எங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆளுநரைத் தாக்கியதாக கூறப்படும் இடத்தில் கிரிஷ் மகாஜன் இருந்தது சந்தேகத்துக்கு உரியது. அவர் என்ன ஆளுநரின் பாதுகாவலரா? அவர் எப்படி அங்கே வந்தார்?
சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் செய்தியாளர்களும் இருந்தீர்கள். இதனால் நீங்கள் தான் உண்மையை விசாரிக்க வேண்டும். விசாரணைக்கு பின்னர் நாங்கள் அப்பாவி என்பது தெரியவரும்.
பாஜக அரசு எங்களை 2 ஆண்டுகளுக்கு சபையை விட்டு வெளியேற்றினால், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வோம். பாஜக அரசின் தவறான செயல்களை பொதுமக்களிடம் விளக்கி கூறுவோம்.
இவ்வாறு சஸ்பென்ட் செய்யப்பட்ட 5 எம்.எல்.ஏக்களும் தெரிவித்தனர்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications