மோடி அரசின் 'தூய்மை இந்தியா' திட்டத்தால் பலன் உண்டா என்று கேட்டோமே.. இங்க பாருங்க அசந்துருவீங்க!
டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தால், ஓராண்டில் 20,000 மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மோடி அரசு அறிமுகம் செய்த ஸ்வச் பாரத் திட்டத்தால் நாட்டில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையிலான ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை என்பது 2017 ஆம் ஆண்டு 8 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு இது 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. அதாவது இக்காலகட்டத்தில், சுமார் 20 ஆயிரம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

டயோரியா நோய்
பாதுகாக்கப்பட்ட குடிநீர், கையை சுத்தப்படுத்தி உணவு உண்ணும் பழக்கம், உணவு பாதுகாப்பு, கழிவறை பயன்பாடு அதிகரித்தது, திறந்தவெளியில் மலம் கழிப்பது குறைக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஒன்றிணைந்து தொற்று நோய்களை கட்டுப்படுத்தி இறப்பு எண்ணிக்கையை குறைத்து உள்ளன.
முறையான கழிவு அகற்றுதல் வசதியின்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காது போன்றவைதான் குழந்தைகளை டயோரியா போன்ற நோய்கள் தாக்குவதற்கு 88 சதவீத காரணம்.

நோய் பரவல் குறைவு
குழந்தைகளுக்கான டயோரியாவை கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக ஆறு தடுப்பூசிகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் காரணமாக, தொற்று நோயால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது. ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டம் தோற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

கழிவறைகள் அவசியம்
தூய்மை இந்தியா திட்டம் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 85.2 மில்லியன் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. நாட்டின் 718 மாவட்டங்களில் 459 மாவட்டங்கள் திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத மாவட்டங்களாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.
திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத மாவட்டங்களில் 9.3 சதவீத குழந்தைகளுக்கு டயோரியா பாதிப்பு ஏற்பட்டது என்றால் திறந்தவெளி மலம் கழிக்கக் கூடிய மாவட்டங்களில் 13.9 சதவீதம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவது தெரிய வருகிறது.

தாய்மார்கள் நலம்
திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத மாவட்டங்களில் தாய்மார்கள் 62.5 சதவீதம் பேர் ஆரோக்கியமான உடல் எடையுடன் உள்ளனர். திறந்தவெளி மலம் கழிக்கக் கூடிய பகுதிகளில் உள்ள தாய்மார்கள் 57.5 சதவீதம் பேர்தான் சரியான எடையுடன் உள்ளனர். ஐநாவின் இந்த புள்ளி விவரத்தை இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications