பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திய நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா பார்சல்: கேட்பது சு.சாமி

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இந்திய பொருளாதாரம்: நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் சனிக்கிழமை மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கலந்து கொண்டு பேசினார்.

Swamy seeks Bharat Ratna for ex-PM PV Narsimha Rao

அப்போது அவர் கூறுகையில்,

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றியதில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பங்கு பாராட்டுக்குரியது. 1990களின் துவக்கத்தில் பொருளாதார சிக்கல் இருக்கையில் நரசிம்ம ராவ் தான் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தினார். ஆனால் அதற்கான பெருமையை, பெயரை மன்மோகன் சிங் பெற்றுக் கொண்டார். உண்மையிலேயே பொருளாதார சீர்திருத்தத்தை செய்திருந்தால் மன்மோகன் சிங்கால் அதை ஏன் தனது ஆட்சி காலத்தில் மீண்டும் செய்ய முடியவில்லை.

Swamy seeks Bharat Ratna for ex-PM PV Narsimha Rao

நாட்டின் பொருளாதாரம் நலிந்திருந்தபோது அதை வளர்ச்சிப் பாதையில் செல்ல வைத்த நரசிம்ம ராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+