இறையாண்மை முக்கியம்... காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சில்லை.. ராஜ்நாத் சிங் உறுதி
டெல்லி: பிரிவினைவாதிகளுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்றும் இந்தியாவின் இறையாண்மையை காப்பது மிக அவசியம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் புர்கன் வானி கொல்லப்பட்டதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. ஜுலை 9ம் தேதி தொடங்கிய கலவரம் மூன்று மாதங்களாகியும் இன்னும் அடங்கவில்லை. இந்தக் கலவரத்திற்கு இதுவரை சுமார் 70 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, காஷ்மீர் கலவரத்தை நிறுத்தி அமைதி ஏற்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 20 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 26 எம்பிக்கள் அடங்கிய குழு ஒன்று காஷ்மீர் சென்று, பல்வேறு தரப்பினரோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது ஹுரியத் அமைப்பு உட்பட அனைத்து பிரிவினைவாத அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்தும் அதனை அவர்கள் ஏற்கவில்லை.
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விலக்கி கொள்ள போவதாகவும் அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை மீண்டும் தூசித் தட்டி எடுத்து விசாரிக்கப்பட போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பிரிவினைவாத தலைவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பண உதவி வருவதை தடை செய்யவும், வெளிநாட்டுப் பயணங்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களது விசாக்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதனிடையே காஷ்மீருக்கு சென்று வந்த அனைத்துக் கட்சிக் குழு கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. அதில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த எம்பிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்,
இந்தக் கூட்டத்தின் இறுதியில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் காஷ்மீரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் நிலவரத்தை சமாளிக்க மாநில அரசு தவறிவிட்டது என்று மெக்பூபா அரசு மீது கூட்டத்தில் குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.
காஷ்மீர் சென்று வந்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச உள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications