தமிழக விவசாயிகள் டெல்லியில் மண்ணில் புதைந்து போராட்டம்!
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் விநாயகரை வைத்து மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தினர்.
டெல்லி: விநாயகர் சதூர்த்தி தினமான இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மண்ணுக்குள் புதைந்து போராட்டம் நடத்தினர். புதைமணலுக்கு முன்பாக ஒரு விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்தனர்.
தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பிலான இந்த போராட்டம் 41 ஆவது நாளாகத் தொடர்கிறது. சாலைகளில் உருண்டு போராட்டம் நடத்தியவர்கள் இன்று மணலுக்குள் புதைந்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையிலான இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லியில் போராட்டம்
தென் இந்திய நதிகளை இணைப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, மீத்தேன் எடுக்கும் பணியில் இருந்து ஒ.என்.ஜி.சியை வெளியேற்றுவது, வறட்சியில் கருகிய பயிர்களுக்கு நஷ்ட ஈடு உட்படப் பல்வேறு பிரச்சனைகள் போராட்டத்தின் கோரிக்கைகளாக உள்ளன.
இதில், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு டெல்லியின் ஜந்தர் மந்தரில் அன்றாடம் ஒரு வித்தியாசமானப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தவகையில், இன்று செல்லபெருமாள், சிவா மற்றும் காமராஜ் ஆகிய 3 விவசாயிகள் தமது கழுத்து வரை மணலுக்குள் புதைத்து கொண்டு போராட்டம் நடத்தினர்.

நூதன போராட்டம்
சில நாட்களுக்கு முன்பாகவும் அங்கு விவசாயிகளின் கீழே விழுந்து போராட்டம் நடத்தினர். ஒருநாள் அந்த மணலில் மாட்டை போல் ஒரு மனிதரை கட்டிய விவசாயிகள் ஏர் உழுதனர். மற்றொரு நாளில், அங்கு நாற்று நட்டு பயிர் செய்தபடி போராட்டம் நடத்தினர்.

மணலில் புதைந்து போராட்டம்
அப்போது அவர்கள் மோடி ஐயா மோடி ஐயா... எங்களை பாருமய்யா பாருமய்யா என்று முழக்கமிட்டனர்.
இன்று விநாயகர் சதூர்த்தி என்பதால் அந்த புதைமணலுக்கு முன்பாக ஒரு விநாயகர் சிலையை வைத்து தமிழக விவசாயிகள் பூஜை செய்தனர். இதனை, ஜந்தர் மந்தர் வழியாக செல்லும் பொதுமக்கள் பலரும் வித்தியாசமாக பார்த்து சென்றனர்.

செவி சாய்க்க மறுப்பு
எங்கள் போராட்டக் குரலுக்கு பிரதமர் நரேந்தர மோடி செவிசாய்க்க மறுக்கிறார். விவசாயிகளின் எந்த பிரச்சனைகளையும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறது.

போராட்டம் தொடரும்
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல், பிரதமரை சந்திக்காமல் நாம் இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டோம். அதுவரையிலும் வெயில், மழை என எதை பொருட்படுத்தாமல் நடைபெறும் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications