தமிழக விவசாயிகள் டெல்லியில் மண்ணில் புதைந்து போராட்டம்!
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் விநாயகரை வைத்து மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தினர்.
டெல்லி: விநாயகர் சதூர்த்தி தினமான இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மண்ணுக்குள் புதைந்து போராட்டம் நடத்தினர். புதைமணலுக்கு முன்பாக ஒரு விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்தனர்.
தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பிலான இந்த போராட்டம் 41 ஆவது நாளாகத் தொடர்கிறது. சாலைகளில் உருண்டு போராட்டம் நடத்தியவர்கள் இன்று மணலுக்குள் புதைந்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையிலான இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லியில் போராட்டம்
தென் இந்திய நதிகளை இணைப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, மீத்தேன் எடுக்கும் பணியில் இருந்து ஒ.என்.ஜி.சியை வெளியேற்றுவது, வறட்சியில் கருகிய பயிர்களுக்கு நஷ்ட ஈடு உட்படப் பல்வேறு பிரச்சனைகள் போராட்டத்தின் கோரிக்கைகளாக உள்ளன.
இதில், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு டெல்லியின் ஜந்தர் மந்தரில் அன்றாடம் ஒரு வித்தியாசமானப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தவகையில், இன்று செல்லபெருமாள், சிவா மற்றும் காமராஜ் ஆகிய 3 விவசாயிகள் தமது கழுத்து வரை மணலுக்குள் புதைத்து கொண்டு போராட்டம் நடத்தினர்.

நூதன போராட்டம்
சில நாட்களுக்கு முன்பாகவும் அங்கு விவசாயிகளின் கீழே விழுந்து போராட்டம் நடத்தினர். ஒருநாள் அந்த மணலில் மாட்டை போல் ஒரு மனிதரை கட்டிய விவசாயிகள் ஏர் உழுதனர். மற்றொரு நாளில், அங்கு நாற்று நட்டு பயிர் செய்தபடி போராட்டம் நடத்தினர்.

மணலில் புதைந்து போராட்டம்
அப்போது அவர்கள் மோடி ஐயா மோடி ஐயா... எங்களை பாருமய்யா பாருமய்யா என்று முழக்கமிட்டனர்.
இன்று விநாயகர் சதூர்த்தி என்பதால் அந்த புதைமணலுக்கு முன்பாக ஒரு விநாயகர் சிலையை வைத்து தமிழக விவசாயிகள் பூஜை செய்தனர். இதனை, ஜந்தர் மந்தர் வழியாக செல்லும் பொதுமக்கள் பலரும் வித்தியாசமாக பார்த்து சென்றனர்.

செவி சாய்க்க மறுப்பு
எங்கள் போராட்டக் குரலுக்கு பிரதமர் நரேந்தர மோடி செவிசாய்க்க மறுக்கிறார். விவசாயிகளின் எந்த பிரச்சனைகளையும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறது.

போராட்டம் தொடரும்
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல், பிரதமரை சந்திக்காமல் நாம் இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டோம். அதுவரையிலும் வெயில், மழை என எதை பொருட்படுத்தாமல் நடைபெறும் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications