For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தந்தே தீர வேண்டும்.. தமிழகம் அதிரடி கோரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 64 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா தந்தே தீர வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

காவிரி கண்கணிப்புக்குழு கூட்டம் டெல்லியில் இன்று காலையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ரேம் மோகன் ராவ் பங்கேற்றுள்ளார். மேலும் ஆலோசனையில் கர்நாடக, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளும் பங்கேற்றுள்ளார்.

Tamil Nadu pressurises Karnataka to give water

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் தர முடியாது என டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கர்நாடகம் பிடிவாதம் பிடித்து வருகிறது.

கர்நாடகத்தில் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயத்துக்கு தண்ணீர் தர முடியாது என காவிரி மேற்பார்வை குழுவிடம் கர்நாடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் தேவையை விட விவசாயம் பெரிதல்ல என்றும் கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்துள்ள தமிழக அதிகாரிகள், தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தர வேண்டிய 64 டி.எம்.சி. தண்ணீரை தந்தே தீர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் கோடிக்கணக்கானோரின் பசியை போக்குவது விவசாயம் தான். இது தான் அவர்களது உயிர் மூச்சு. குடிநீரைப் போலவே விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளித்து காவிரியிலிருந்து நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரினர். தமிழக தலைமைச் செயலர் ராம்மோகன ராவ் தலைமையில் தமிழக அதிகாரிகள் தமிழகத்தின் தண்ணீர் தேவையை வலியுறுத்திப் பேசினர்.

English summary
Tamil Nadu has submitted its strong demand in the cauvery monitoring committee that Karnataka should give water at any cost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X